tamilnadu

img

பண்டிட்டுகள் இல்லாமல் காஷ்மீர் முழுமையடையாது!

ஸ்ரீநகர்:
இந்தியாவின் 73-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, ஜம்மு- காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள உள்ள ஷெர்-ஐ-காஷ்மீர் மைதானத்தில், மூவண்ணக் கொடியை ஏற்றி வைத்து, அம்மாநிலஆளுநர் சத்யபால் மாலிக் உரை யாற்றியுள்ளார். அந்த உரையில் அவர் கூறியிருப்பதாவது:

“காஷ்மீரில் பிரிவு 370 நீக்கப் பட்டதால், இங்குள்ள மக்களின் அடையாளம் பறிபோகும் என்று யாரும் கவலைப்படக்கூடாது. ஜம்மு - காஷ்மீர் மக்களின் அடையாளத்திற்கு எந்தவிதத்திலும் ஆபத்து இல்லை என்பதைஉறுதிப்படுத்த விரும்புகிறேன். மாநிலமக்கள் அனைவருக்கும் பிரதி நிதித்துவம் கிடைக்கும்.ஜூம்மா தொழுகைக்குப் பிறகு அடிக்கடி கல் வீசும் சம்பவங்கள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. அலைந்து திரிந்தஇளைஞர்கள் விரைவாக பிரதானநீரோட்டத்திற்கு திரும்பி வருகின்றனர். எல்லையைத் தாண்டி ஊடுருவலைத் தடுக்க பன்முக அணுகுமுறையை நாங்கள் பின்பற்றியுள்ளோம்.காஷ்மீர் பண்டிட்டுகள் இல்லாமல் காஷ்மீர் முழுமையடையவில்லை. பள்ளத்தாக்கில் காஷ்மீர் பண்டிட்டுகள் பாதுகாப்பாக திரும்பு வதற்கும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கும் அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது. புலம்பெயர்ந்தவர்கள் காஷ்மீர் திரும்புவது அனைவரின் ஆதரவால் மட்டுமே சாத்தியமாகும்.” வ்வாறு ஆளுநர் பேசியுள்ளார்.

;